மத்தேயு நற்செய்தி அதிகாரம். 13

மத்தேயு நற்செய்தி அதிகாரம் 13

மத்தேயு 13

உவமைப் பொழிவு
விதைப்பவர் உவமை (மாற் 4:1-9; லூக் 8:4-8)

  1. அதே நாளில் இயேசு வீட்டிற்குவெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார்.
  2. மக்கள் பெருந் திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந் தார். திரண்டிருந்த மக்கள் அனை வரும் கடற்கரையில் நின்றுகொண்டி ருந்தனர்.
  3. அவர் உவமைகள் வாயி லாகப் பலவற்றைக் குறித்து அவர் களோடு பேசினார்: “விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.
  4. அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.
  5. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல் லாததால் அவை விரைவில் முளைத் தன;
  6. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின.
  7. மற்றும் சில விதை கள் முட்செடிகளின் இடையே விழுந் தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன.
  8. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந் தன. அவற்றுள் சில நூறு மடங் காகவும் சில அறுபது மடங்காக வும் சில முப்பது மடங்காகவும்விளைச்சலைக் கொடுத்தன.
  9. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.

உவமைகளின் நோக்கம் (மாற் 4:10-12; லூக் 8:9-10)

  1. சீடர்கள் அவரருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயி லாகப் பேசுகின்றீர்?” என்று கேட் டார்கள்.
  2. அதற்கு இயேசு அவர் களிடம் மறுமொழியாகக் கூறியது: “விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத் திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை.
  3. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிட மிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.
  4. அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.
  5. இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: ‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும்
    கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும்
    உணர்வதில்லை.
  6. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகிவிட்டது.
    இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’
  7. உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன.உங் கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன.
  8. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங் கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பி னார்கள்; ஆனால் அவர்கள் கேட்க வில்லை.

விதைப்பவர் உவமையின் விளக்கம் (மாற் 4:13-20; லூக் 8:12-15)

  1. “எனவே விதைப்பவர் உவமை யைப் பற்றிக் கேளுங்கள்:
  2. வழியோரம் விதைக்கப்பட்ட விதை களுக்கு ஒப்பானோர் இறையாட்சி யைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப் பட்ட விதைகளைத் தீயோன் கைப் பற்றிச் செல்லுவான்.
  3. பாறைப் பகு திகளில் விதைக்கப்பட்ட விதை களுக்கு ஒப்பானோர் இறைவார்த்தை யைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சி யோடு ஏற்றுக்கொள்வார்கள்.
  4. ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தை யின் பொருட்டு வேதனையோ இன் னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.
  5. முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப் பானோர் இறைவார்த்தையைக் கேட் டும் உலகக் கவலையும் செல்வ மாயை யும் அவ்வார்த்தையை நெருக்கிவிடு வதால் பயன் அளிக்க மாட்டார்கள்.
  6. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறை வார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்கா கவும் பயன் அளிப்பர்.”

வயலில் தோன்றிய களைகள் உவமை

  1. இயேசு அவர்களுக்கு எடுத்து ரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணர சைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிட லாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார்.
  2. அவருடையஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக் கிடையே களைகளை விதைத்துவிட் டுப் போய்விட்டான்.
  3. பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப் பட்டன. 27நிலக்கிழாருடைய பணி யாளர்கள் அவரிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட் டார்கள்.
  4. அதற்கு அவர், ‘இது பகைவனுடைய வேலை’ என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன? என்று கேட்டார்கள்.
  5. அவர், ‘வேண்டாம். களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த் துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கி விடக்கூடும்.
  6. அறுவடைவரை இரண் டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம். முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டு களாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங் கள்” என்று கூறுவேன்’ என்றார்.”

கடுகு விதை, புளிப்பு மாவு உவமைகள் (மாற் 4:30-32; லூக் 13:18-21)

  1. 31-
  2. இயேசு அவர்களுக்கு எடுத் துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை” எடுத்துத் தம் வய லில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல் லாச் செடிகளையும் விடப் பெரிய தாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக் கடுகு விதைக்கு ஒப்பாகும்.
  3. அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: “பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவுமுழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்.”

உவமைகள் வாயிலாகவே பேசும் இயேசு (LOIT 4:33-34)

  1. இவற்றையெல்லாம் இயேசு மக் கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை.
  2. “நான் உவமைகள் வாயிலாகப் பேசு வேன்; உலகத் தோற்றமுதல் மறைந் திருப்பவற்றை விளக்குவேன்” என்று இறைவாக்கினர் உரைத்தது இவ் வாறு நிறைவேறியது.

வயலில் தோன்றிய களைகள் உவமையின் விளக்கம்

  1. அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட் டுக்குள் வந்தார். அப்போது அவ ருடைய சீடர்கள் அவரருகே வந்து, “வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்” என்றனர்.
  2. அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்: “நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்;
  3. வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்;
  4. அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறு வடை, உலகின்முடிவு; அறுவடை செய் வோர், வானதூதர்.
  5. எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக் குவார்களோ அவ்வாறே உலக முடி விலும் நடக்கும்.
  6. மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும்* நெறிகெட்டோ ரையும் ஒன்று சேர்ப்பார்கள்;
  7. பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளு வார்கள். அங்கே அழுகையும் அங்க லாய்ப்பும் இருக்கும்.
  8. அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சி யில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”

புதையல் உவமை

  1. “ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக் கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக் குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண் ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

முத்து உவமை

  1. “வணிகர் ஒருவர் நல்முத்து களைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றை யும் விற்று அதை வாங்கிக்கொள் கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்

வலை உவமை

  1. “விண்ணரசு கடலில் வீசப் பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.
  2. வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்ட வற்றை வெளியே எறிவர்.
  3. இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்;
  4. இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்;
  5. பின் அவர் களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”

முடிவுரை

  1. “இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள், “ஆம்” என்றார்கள்.
  2. பின்பு அவர், “ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமை யாளரைப்போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார்.

4 விண்ணரசின் அமைப்பு
சொந்த ஊரில் இயேசு புறக்கணிக்கப்படுதல் (மாற் 6: 1-6; லூக் 4: 16-30)

  1. இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
  2. தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்?
  3. இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவ ருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?
  4. இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல் லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள்.
  5. இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறை வாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார்.
  6. அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.